புதிய தமிழகம் கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் 129 பேர் கைது

விருதுநகரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக புதிய தமிழகம் கட்சியினர் 129 பேரை சூலக்கரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
Updated on
1 min read

விருதுநகரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக புதிய தமிழகம் கட்சியினர் 129 பேரை சூலக்கரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கொம்பன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால், இப்போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை.எனவே இத்தடையை மீறி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூலக்கரை காவல் நிலைய போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 129 பேரையும் கைது செய்து தனியார் அரங்கத்தில் பாதுகாப்புடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com