காமராஜர் மணிமண்டபம்: நூலகர், காப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு

விருதுநகர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் ஆகிய
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் ஆகிய பணியிடத்திற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.]

இது குறித்து செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஜெயஅருள்பதி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இப்பணியிடத்திற்கு ஆதிதிராவிடர்(முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்), முன்னுரிமையற்றவர்( அருந்ததியர் எவரும் இல்லாத பட்சத்தில்) என்ற இனச்சுழற்சி அடிப்படையில் பணியிடம் நிரப்பட உள்ளது. இதற்கான வயது வரம்பு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.இப்பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஏதாவது பல்கலைக்கழகத்தில் நூலக தகவல் அறிவியல்(சி.எல்.ஐ.எஸ்) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் வருகிற 14-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com