தஞ்சை அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது

தஞ்சாவூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை தாலுக்கா போலீஸôர் கைது செய்தனர்.
Updated on
1 min read

தஞ்சாவூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை தாலுக்கா போலீஸôர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும், கடந்த 12-ஆம் தேதி திருவிழாவுக்கு சென்று விட்டதால், அந்த பெண் தனியாக இருந்துள்ளார். இதைத் தெரிந்து கொண்ட தஞ்சாவூர் களிமேடு மேற்கு தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் அருண் (20), அந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிடவே, அவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை கள்ளப்பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த தஞ்சாவூர் தாலுக்கா காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், தலைமறைவாக இருந்த அருணை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தார். கைது செய்யப்பட்ட அருண் விவசாய கூலித்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com