விருதுநகர் மாவட்டத்தில் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சிக்கான விண்ணப்பம் விநியோகம் 14-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரையில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையத்தின் முதல்வர் மோகன்ராம் வெள்யிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் அருப்புக்கோட்டையை அடுத்த பாலையம்பட்டியில் உள்ள விருதுநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிக்கான விண்ணப்பங்களை எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250ம், இதர பிரிவினருக்கு ரூ.500ம் ரொக்கமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அசல் சான்றிதழ்களின் நகலையும் இணைத்து விண்ணப்பங்கள் பெற்ற இடத்திலேயே நேரில் ஒப்படைக்க வேண்டும் என பயிற்சி நிலையத்தின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.