ஆம்பூர்: ஆம்பூர் தொகுதியில் திமுக கூட்டணிக்காக ஒத்துக்கப்பட்டதையடுத்து, அதிருப்தியாளர்கள் சிலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக தலைமையிலான கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. நேற்று ஆம்பூர் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் ஆம்பூர் தொகுதியில் வி.ஆர் நசீர் அகமது தேர்வு செய்யப்பட்டார். இதற்கு, நிர்வாகிகள் சிலர் திமுக.,வில் சென்று தங்களின் அதிப்தியை தெரிவித்தனர். திமுக தலைவர் கூட்டணிக்காக பணி செய்யுமாறு சொல்லி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர் ஆம்பூர் நிர்வாகிகள். இந்நிலையில் மனிய நேய மக்கள் கட்சியில் ஆம்பூர் சார்ப்பில் வி.ஆர் நசீர் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து திமுக., நிர்வாகிகளுக்கிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் ஆம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு வாய்ப்பளிக்க கோரி ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக அலுவலகத்தை முற்றுக்கையிட்டனர்.
ஆம்பூர் நேதாஜி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் நகர செயலாளர் எம்.ஆர் ஆறுமுகம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதனால் ஆம்பூரில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.