

அரியலூர்: அரியலூர் அருகே சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக கூறி பள்ளி மாணவி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிது அரியலூர் மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கரூர் மாவட்டம், திருகாம்புலியூர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் மாதவன்(27). அரியலூர் மாவட்டம் குவாகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசியரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 4.9.2015 அன்று சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக கூறி அதே பள்ளியில் படித்த 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை ஜயங்கொண்டம் அருகேயுள்ள வேலாயுதபுரம் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன், குற்றம் சாட்டப்பட்ட மாதவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.