மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நேற்று காலை முதலே போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை, போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் ஏராளமானோரை போலிசார் கைது செய்தனர். அவர்களில் முதற்கட்டமாக 32 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்துள்ளனர்.
மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டமாக ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து கொண்டிருப்பதால் அரசியல் தலையீடு வந்துவிடக்கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் தள்ளிநின்று ஆதரவு அளித்து கொண்டிந்தன என்றாலும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளுமே குரல் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.