

சென்னை அடையாறில் அமைக்கப்பட்ட சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்துவைத்தார்.
அப்போது விழாவில் பேசிய சிவாஜியின் இளைய மகன் பிரபு, நான் எம்ஜிஆரையும் கருணாநிதியையும் பெரியப்பா என்று தான் அழைப்பேன். சிலையை நிறுவிய கலைஞர் கருணாநிதியின் பெயரை ஒரு ஓரத்திலாவது மணிமண்டபத்தில் வையுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.
சிவாஜி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதால் பல்வேறு கட்சியினரும் இந்த விழாவுக்கு வந்துள்ளனர். எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நடைபெறும் நேரத்தில் சிவாஜியின் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.
சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவது என் பணி என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னிடத்தில் கூறினார். சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு இன்று நிறைவேறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.