

விவசாயத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் விவசாயிகள், படிப்பதற்காகத் தூக்கில் தொங்கும் மாணவர்கள், இந்தப் பாவ கணக்கை மற்றவர் தலையில் எழுதும் அரசியல்வாதிகள், போராடிப் போராடி அலுத்துப் போன மக்கள், இதுதான் இன்றைய புதுமை இந்தியா.
அரியலூர் மாவட்டத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தை சேர்ந்த அனிதா பன்னிரண்டாம் வகுப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்து எடுத்த மதிப்பெண் 1176, மருத்துவ படிப்பிற்கு தேவையாக இருந்த 196.5 கட் ஆஃபையும் எடுத்தும் நடுவில் வந்த ‘நீட்’ தேர்வால் வாய்ப்பை இழந்தார். மருத்துவம் படித்து முடித்திருந்தால் தனது கிராமத்தின் முதல் மருத்துவர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்திருக்கும், ஆனால் இப்பொழுது தனது மரணத்தால் தமிழகத்தில் பலரை ஏழை மாணவர்கள் படும் பாட்டை பற்றி பேச வைத்த பெருமைதான் அவருக்குக் கிடைத்துள்ளது.
இன்றைய நிலையிலும், நீட் தேர்வை ஆதரிப்பதோடு மட்டும் நில்லாமல் அனிதாவின் தற்கொலை முடிவை விமர்சித்தும் பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அப்படி அவர்கள் கூறும் அந்த ஏழு முக்கிய காரணங்கள் என்ன?
“ஒரு முறை வந்தால் அது கனவு, இரு முறை வந்தால் அது ஆசை, பலமுறை வந்தால் அது லட்சியம்” அந்த வகையில் இங்குக் கனவு கலைக்கப்படவில்லை, ஒரு லட்சியம் அழிக்கப்பட்டுள்ளது என்பதே அனிதாவிற்காக போராடுபவர்களின் வாதம். அனிதாவின் மரணத்திற்குக் காரணம் நீட் தேர்வு அல்ல அந்தத் தேர்வை எதிர்கொள்ளும் அளவிற்கு மாநில பாடத்திட்டம் தரமானதாக இல்லாததே என்பது நீட் தேர்வை ஆதரிப்பவர்களின் கூற்று. குறைந்தது அனிதாவை போல் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 104 சேவை போல் மனநல ஆலோசகர்களை அரசு ஏற்பாடு செய்வது மேலும் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.