

சென்னை: கோவை சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சோமனூரில் பேருந்து நிலைய கட்டிடம் இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வளாத்தில் இருந்த கடைகள் இடிந்து விழுந்தன. இந்த கோர சம்பவத்தில் பேருந்துகளுக்காக காத்திருந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து தகவலறிந்த கருமத்தம்பட்டி போலீஸார், தீயணைப்புத்துறையினர் பொக்லின், கிரேன் இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகளை அப்புறப்படுத்தி சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் திருப்பூர், கோவை, பல்லடம் பகுதிகளிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. இந்த திடீர் விபத்தில் ஐந்து பேர் வரை இறந்திருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் இக்கோரச் சம்பவத்தில் சிக்கி பலியானோர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.