எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

மத்தியபிரதேசத்தில் சோகம்: மினி லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி

மத்தியபிரதேசத்தில் மினி லாரி ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் பயணம் செய்த 21 பேர் பரிதாபமாக பலியாயினர்.

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 8:40 am IST

சித்தி: மத்தியபிரதேசத்தில் மினி லாரி ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் பயணம் செய்த 21 பேர் பரிதாபமாக பலியாயினர். பலர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. 

மத்தியபிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்தில், ஒரு குழுவினர் திருமணம் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பி மினி லாரியில் சொந்த ஊர் வந்துகொண்டிருந்தனர். பாலத்தின் மீது லாரி சென்ற போது எதிர்பாரத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, 60 - 50 அடி கிழே ‛சோனே' ஆற்றுக்குள் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில், மினி லாரியில் பயணம் செய்த 21 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். 

காமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் சித்தி மாவட்ட ஆட்சியர் திலீப் குமார் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.