தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மத்தியபிரதேசத்தில் சோகம்: மினி லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி

மத்தியபிரதேசத்தில் மினி லாரி ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் பயணம் செய்த 21 பேர் பரிதாபமாக பலியாயினர்.

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 3:10 am

சித்தி: மத்தியபிரதேசத்தில் மினி லாரி ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் பயணம் செய்த 21 பேர் பரிதாபமாக பலியாயினர். பலர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. 

மத்தியபிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்தில், ஒரு குழுவினர் திருமணம் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பி மினி லாரியில் சொந்த ஊர் வந்துகொண்டிருந்தனர். பாலத்தின் மீது லாரி சென்ற போது எதிர்பாரத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, 60 - 50 அடி கிழே ‛சோனே' ஆற்றுக்குள் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில், மினி லாரியில் பயணம் செய்த 21 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். 

காமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் சித்தி மாவட்ட ஆட்சியர் திலீப் குமார் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.