தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஏப்ரல் 27-ல் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: சீனா உறுதி

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 27ஆம் தேதி சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார் என சீனா தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2018, 5:38 pm

பிய்ஜீங்: பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 27ஆம் தேதி சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார் என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வாஹூன் நகரில் ஏப்ரல் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். இருதரப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என தெரிகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இன்று ஞாயிற்றுக்கிழமை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள் குறித்தும் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ஏப்ரல் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு வெற்றி பெறும் உறுதியாக நம்புகிறோம் என வாங் யீ தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது இருதரப்பு உறவு உள்ளிட்ட முக்கிய பிரச்சனை குறித்து இரு தலைவர்களும் பேச உள்ளதாகவும், இந்த சந்திப்பு இரு நாடுகளின் உறவுகளில் ஒரு மைல்கல் என்று நிரூபிக்கும் என்று வாங் கூறினார். 

கடந்த வாரம் திங்கள்கிழமை ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக, ஸ்வீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் உறவை பலப்படுத்துவது மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.