அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுல்யூ. புஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுல்யூ. புஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (93). இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), அமெரிக்காவின் 43-வது அதிபராக பதவி வகித்தவர். பார்பரா புஷ் கடந்த செவ்வாய்கிழமை (ஏப் 17) காலமானார். அவரது மறைவுக்கு பின், முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுல்யூ. புஷ் உடல்நலக்குறைவு காரணமாக ஹூஸ்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புஷ் நேற்று காலை ஹூஸ்டன் மெதடிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தத்தில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு தகுந்து சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். தற்போது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com