நெல் ஜெயராமன் மறைவு

நெல் ஜெயராமன்  நேற்று சென்னையில் காலமானார்.  இவர் பாரம்பரிய 169 நெல் ரகங்களை கண்டுபிடித்து, மீண்டும் புழக்கத்திற்கு கொண்டு வந்தவர்.
நெல் ஜெயராமன் மறைவு
Published on
Updated on
1 min read


சென்னை: நெல் ஜெயராமன்(50)  இன்று சென்னையில் காலமானார்.  இவர் பாரம்பரிய 169 நெல் ரகங்களை கண்டுபிடித்து, மீண்டும் புழக்கத்திற்கு கொண்டு வந்தவர். கல்லான மனிதரை பதராக்கிய புற்று நோய் முழுதாய் கொள்ளை கொண்டு போனது.

நெல் ஜெயராமன் உடல் தேனாம்பேட்டை ரத்னா நகர் 2-ஆவது தெருவில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் நெல் ஜெயராமன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை மதியம் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. நெல் ஜெயரமானுக்கு சித்ரா என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.  

விவசாயி என நெஞ்சை நிமிர்த்தி  சொல்லிகொண்டிருக்க ஒரு காரணமாயிருந்த ஒரு மனிதரை  இழந்துவிட்டோம். அவரது மறைவுக்கு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com