புதுதில்லி: தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் ஏழைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தில்லியில் அரசு மானியமாக அளித்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
மேலும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசுக்கும் இடையேயான இந்த ஒப்பந்தம் மீறப்பட்டாலோ, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு பாரபட்சமாக சிகிச்சை அளிக்கப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவை குறித்தும், இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறதா என்பதையும் கண்காணித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என தில்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்கும்..! ஃபிஃபா தலைவர் உறுதி!

ஹூண்டாய் கார் பிரியர்களுக்கு... கிராண்ட் ஐ10 நியாஸ் வைப்!

கோவையில் வேட்பாளர்களை தனித்தனியாக சந்தித்த முதல்வர் மருமகன் சபரீசன்!

ஈரான் அதிகாரிகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


