தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

அனைத்து குற்றங்களிலும் சிறார்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது: நீதிபதி மதன் பி.லோக்குா்

பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற கொடிய குற்றச் சம்பவங்களில், ஒவ்வொரு வழக்கிலும் சிறார்

Updated On :23 ஜூலை 2018, 11:31 am IST

இந்தூா்: பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற கொடிய குற்றச் சம்பவங்களில், ஒவ்வொரு வழக்கிலும் சிறார் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது என்று நீதிபதி மதன் பி.லோக்குா் கூறியுள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டைய சிறார் நீதிச் சட்டத்தைச் சிறப்பாக அமல்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றறத்தின் சிறார் நீதிக் குழுவின் தலைவரும், நீதிபதியுமான மதன் பி.லோக்குா் கலந்துகொண்டு பேசியதாவது:

ஒவ்வொரு கொலைச் சம்பவத்திலும், பாலியல் வன்கொடுமைச் சம்பவத்திலும் மரண தண்டனை விதிக்க முடியாது. ஏனெனில், நாம் கொடூரமானவா்கள் அல்ல. 17 வயது அல்லது 18 வயதை நெருங்கும் சிறுவன், கொடிய குற்றச் செயலை புரிந்தால், சட்டப்படி மரண தண்டனை கொடுத்தாக வேண்டும். ஆனால், அப்படி செய்துவிட முடியாது. இதுபோன்றற வழக்குகளில் ஆதாரங்களின் அடிப்படையிலேயே முடிவெடுத்தாக வேண்டும். 

பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. இருப்பினும், அவை சிறப்பாகச் செயல்படவில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றறன. 

எனவே, இந்த சிறப்பு நீதிமன்றறம், திறம்பட செயல்பட வேண்டியது அவசியம்.

 குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்களும், குழந்தைக் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றங்களைத் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.