

திருச்செந்தூர்: அத்திவரதர் தரிசனம் 48 நாட்கள் மட்டுமே நடைபெறும். அதற்கு மேல் நீட்டிக்கப்படாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த காலங்களில் அத்திவரதர் தரிசனம் ஆகமவிதிப்படி 48 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. அதேபோல் ஆகமவிதிப்படி இந்த ஆண்டும் அத்திவரதர் தரிசனம் 48 நாட்கள் மட்டுமே நடைபெறும். அதற்கு மேல் நீட்டிக்கப்படாது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.