தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் 19 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் 19 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை பகல் வெயில் காய்ந்த நிலையில் மாலையில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. 

இதனிடையே, வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளாதால், வங்க கடலில் தென்கிழக்கு மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் வருகிற 2 ஆம் தேதி வலுப்பெறக்கூடும் என்றும், இதனால் அடுத்த 72 மணி நேரத்தில் அந்தமான் நிகோபர், கேரளா மற்றும் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் கன முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் 19 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மாநகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com