பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிப்பில் 20 ஆயிரம் தொழிலாளர்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பரமத்திவேலூர் வட்டம் சோழசிராமணி, ஜமின்இளம்பள்ளி, ஜேடர்பாளையம், கு.அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், பெரியசோளிபாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம், அண்ணாநகர் மற்றும் பொன்மலர்பாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் விளையும் கரும்புகள் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 700க்கும் மேற்பட்ட வெல்லம் தயார் செய்யப்படும் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரும்பை சாறாக பிழிந்து பின்னர் அச்சு வெல்லம்,குண்டு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவை தயார் செய்யப்படுகிறது. 

வெல்லம் தயாரிக்கும் பணியில் ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெல்லம் தயாரிக்கும் ஈடுபட்டுள்ளனர்.

தயார் செய்யப்பட்ட வெல்லங்களை வெல்ல ஆலை உரிமையாளர்கள் 30 கிலோ கொண்ட மூட்டைகளாக (சிப்பங்களாக) கட்டப்பட்டு பிலிக்கல்பாளையத்தில் உள்ள விவசாயிகள் வெல்லம்,சர்க்கரை விற்பனை சந்தைக்கு கொண்டு செல்கின்றனர். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் வெல்ல ஏலத்தில் தரத்திற்கு தகுந்தார் போல் ஏலம் விடப்படுகிறது. 

வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு நாமக்கல், கரூர், சேலம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து சென்கிறனர். 

ஏலம் எடுக்கப்பட்ட வெல்லங்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் முக்கிய பங்கு வகிப்பது பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்க்கரை பொங்கல் வைப்பதற்கு வெல்லம்,நாட்டு சர்க்கரை முக்கிய பங்கு வகிப்பதால், வெல்ல காய்ச்சும் ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய போது பிலிக்கல்பாளையம் வெல்லம், சர்க்கரை ஏல சந்தையில் இருந்து வெல்லத்தை மொத்தமாக கொள்முதல் செய்தது. 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பொருட்களில் வெல்லம் வழங்காமல் கரும்பு,ஏலக்காய்,பச்சரிசி,உலர்திராட்சை,அஸ்கா சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே வழங்கி வருகின்றனர். இனி வரும் காலங்களில் பொங்கல் பண்டிக்கு வெல்லத்தை கொள்முதல் செய்து குடும்ப அட்டை தாரார்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என வெல்ல உற்பத்தியாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது குண்டு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1300-க்கும்,அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1200-க்கும் விற்பனையாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com