வேகமாய் உயரும் பெட்ரோல், டீசல் விலை: விரக்தியில் வாகன ஓட்டிகள்

இந்தியாவின் எரிபொருள் தேவை பெருமளவில் இறக்குமதி மூலமே நிறைவு செய்யப்படுகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் அதிகமாக இறக்குமதி
வேகமாய் உயரும் பெட்ரோல், டீசல் விலை: விரக்தியில் வாகன ஓட்டிகள்
Published on
Updated on
1 min read

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.77 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் எரிபொருள் தேவை பெருமளவில் இறக்குமதி மூலமே நிறைவு செய்யப்படுகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் அதிகமாக இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. 

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் அதன் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.87-க்கும் மேல் அதிகரித்தது. டீசலும் ரூ.80-ஐ எட்டியது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டன. இதையடுத்து, பல்வேறு தரப்பினர் சொந்த வாகனப் பயன்பாட்டைத் தவிர்க்கத் தொடங்கினர். அதன் தாக்கம் விற்பனையில் எதிரொலித்தது.

இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான வரியை ரூ.2.50 வரை குறைத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து குறைந்தது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.14.54-ம், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ. 13.53-ம் குறைந்தது. 

இறங்கு முகத்தில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை, சில நாட்களில் சிறதளவில் மாற்றங்களை கண்டு வந்தநிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில், தொடர்ந்து அதிகரிக்கவே தொடங்கியது. திடீரென சில தினங்கள் குறையத் தொடங்கியது. சில தினங்களாக குறைந்தும், அதிகரித்தும் மாற்றமின்றியும் விற்பனையாகி வந்தது. இப்போது, மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 

சென்னையில் நேற்று புதன்கிழமை பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.75.56 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.69.77 ஆக விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.75.56 ஆகவும், டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.69.77 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இறங்கு முகமாகவும், மாற்றமின்றியும் விற்பனையாகி வந்த பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்வது வாகன ஓட்டிகள், விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com