அச்சுறுத்தும் அபராதத் தொகை: நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச்சட்டத்திற்கு எதிராகவும் அச்சுறுத்தும் அபராதத் தொகையை குறைக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை
அச்சுறுத்தும் அபராதத் தொகை: நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
Published on
Updated on
1 min read


திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச்சட்டத்திற்கு எதிராகவும் அச்சுறுத்தும் அபராதத் தொகையை குறைக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ், இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. 

புதிய மோட்டார் வாகன சட்டப்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும், பழைய சட்டத்தில் சில முக்கிய திருத்தத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கான திருத்த மசோதா, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 2019 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டால் ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை ஒரு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், போக்குவரத்து விதிகளை மீறும் நபருக்கு அபராதக் கட்டணம் முன்பு இருந்ததைவிட பன்மடங்கு அபராதம் விதிப்பது போன்றவை புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், அபராதம் என்றபெயரில் ஒரு லட்சம் வரையும் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டத்திற்கு எதிராகவும், சாலை விதிமுறை மீறல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தொகையை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் நாடுமுழுவதும் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.  

அகில இந்திய மோட்டர் போக்குவரத்து காங்கிரஸ் அறிவித்து நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில் இந்தியா முழுவதும் 45 லட்சம் லாரிகளும், தமிழக்தில் மட்டும் நான்கு லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் இயக்கப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com