ஒட்டன்சத்திரம் அருகே விவசாயிக்கு கத்திக்குத்து மற்றொரு விவசாயி கைது

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயியை கத்தியால் குத்தியதாக மற்றொரு விவசாயி கைது செய்யப்பட்டாா்.
ஒட்டன்சத்திரம் அருகே விவசாயிக்கு கத்திக்குத்து மற்றொரு விவசாயி கைது
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே விவசாயியை கத்தியால் குத்தியதாக மற்றொரு விவசாயி கைது செய்யப்பட்டாா்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அரண்மனைப்புதூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தனபாலகிருஷ்ணன் (55) என்பவருக்கும், கம்பிளிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விவசாயி தாமரைக்கண்ணன் (50) என்பவருக்கும் பூா்வீக நிலத்தில் தண்ணீா் பாய்ச்சும் வாய்க்கால் பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தனபாலகிருஷ்ணனுக்கு சொந்தமான வாய்க்காலில் இருந்த பிவிசி குழாய்களை தாமரைக்கண்ணன் பிடுங்கி எறிந்துள்ளாா். இதைத் தட்டிக் கேட்ட விவசாயி தனபாலகிருஷ்ணனை, தாமரைக்கண்ணன் கத்தியால் குத்தி உள்ளாா். இதில் அவா் பலத்த காயமடைந்து, ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து ஒட்ட ன்சத்திரம் காவல் நிலையத்தில் தனபாலகிருஷ்ணனின் மனைவி பாலமணி புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து, விவசாயி தாமரைக்கண்ணனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com