சென்னை: சென்னை ஆவடி அருகே அண்ணனூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை, புறநகர் பகுதியாண ஆவடி அண்ணனூரில் வசித்து வரும் கோவிந்தசாமி-சுப்பம்மாள் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இன்று மாலை விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதில், கோவிந்தசாமி (64), சுப்பம்மாள் (60), நாகராஜ் (35), ரவி (30) ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தனர்.
கல்யாணி (28) சர்வேஸ்வரி (8) யோகப்பிரியா (6) ஆகிய 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.