சென்னையில் பரபரப்பு.. ஆவடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை

சென்னை ஆவடி அருகே அண்ணனூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை
சென்னையில் பரபரப்பு.. ஆவடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை


சென்னை: சென்னை ஆவடி அருகே அண்ணனூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை, புறநகர் பகுதியாண ஆவடி அண்ணனூரில் வசித்து வரும் கோவிந்தசாமி-சுப்பம்மாள் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இன்று மாலை விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதில், கோவிந்தசாமி (64), சுப்பம்மாள் (60), நாகராஜ் (35), ரவி (30) ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தனர். 

கல்யாணி (28) சர்வேஸ்வரி (8) யோகப்பிரியா (6) ஆகிய 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com