கருணாநிதியின் வாழ்க்கையே போராட்டம் தான்: மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு

பள்ளிப் பருவத்திலேயே திருவாரூரில் உள்ள ஒரு பள்ளியில் அவரை சேர்க்க அனுமதி மறுக்கப்பட்ட போது, அந்தப் பள்ளிக்கு எதிரே உள்ள குளத்தில் 
கருணாநிதியின் வாழ்க்கையே போராட்டம் தான்: மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு



ஈரோடு: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் வாழ்க்கையே பெரும் போராட்டம் தான் என அவரது மகனும், திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

கருணாநிதி மறைவிற்கு பிறகு முதல் முறையாக அண்ணா அறிவாலயத்தில் சிலை திறந்து வைக்கப்பட்டது. அந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தனர். கருணாநிதியின் குரு மூலமாக விளங்கும் ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவதாக சிலை நிறுவப்பட்டது.

அதன் பிறகு அண்ணா பிறந்த மண்ணில் மூன்றாவதாக சிலை நிறுவப்பட்டது. வீரர்கள் நிறைந்த மாவட்டமான திருச்சி மாநகரில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் நான்காவதாக தொடர்ந்து சிலை நிறுவப்பட்டது. பின்னர் கருணாநிதியின் மூத்த பிள்ளையான முரசொலியில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டது. அதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (செப். 22) ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி அவர்களின் முழு திருவுருவ சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்.22) திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய ஸ்டாலின், ஈரோட்டில் இரண்டாவது சிலையாக திராவிட கொள்கைகளை பறைசாற்றிய ஏ.டி. பன்னீர்செல்வம் பெயரில் உள்ள பூங்காவில் திறப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பெரும் போராட்டத்திற்கு பிறகு இந்த சிலை திறக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் வாழ்க்கையே பெரும் போராட்டம் தான்.

பள்ளிப் பருவத்திலேயே திருவாரூரில் உள்ள ஒரு பள்ளியில் அவரை சேர்க்க அனுமதி மறுக்கப்பட்ட போது, அந்தப் பள்ளிக்கு எதிரே உள்ள குளத்தில் பள்ளியில் சேர்க்காவிட்டால் நான் குதித்து விடுவேன் என போராடிய பிறகே பள்ளியில் அவரை சேர்த்தார்கள்.

பள்ளிக்கூடம் சேரும்பொழுது போராடி சேர்ந்தவர். அவர் திருமணத்தின் போது திருமணம் முடிந்த கையோடு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். மொழி போராட்டத்திற்காக டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றுவதற்காக ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து போராடிய பிறகே அதன் பெயர் மாற்றமடைந்தது.

இதேபோல் திமுக ஆட்சியில் இருந்த பொழுது நெருக்கடி நிலை ஏற்பட்டு ஆட்சி கவிழும் நிலையில் தில்லியில் இருந்த தூதுவர்கள் வந்து நெருக்கடி நிலையை எதிர்த்து பேசாதீர்கள் என தூது விட்டனர் அப்போதும் நெருக்கடி நிலையை எதிர்த்துப் பேசி நமக்கு ஆட்சி முக்கியமல்ல என எமெர்ஜென்சியை எதிர்த்து ஆட்சியை இழந்தவர் தான் கருணாநிதி.

தலைவர் நம்மை விட்டு பிரிந்து இரண்டாண்டு ஆகிறது. ஆனால் இன்னும் அவர் சாதனைகளை சொல்லாமல் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், ஜெயலலிதா அம்மையார் மறைந்து இரண்டு ஆண்டுகளாகியும் அதிமுகவினர் ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தவில்லை. இவர்கள் தங்கள் சட்டை பாக்கெட்டில் அந்த அம்மையாரின் புகைப்படத்தை வைத்து கொள்ளையடிக்கும் இந்த கூட்டம் ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தவில்லை.

தமிழகம் முழுவதும் உரிய அனுமதியோடு கருணாநிதி சிலை திறக்கப்படும். நீதிமன்றம் சென்று வாதாடும் முன் இந்த அரசு இந்த சிலையை அமைக்க அனுமதி கொடுத்ததே நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இப்போது பெரும் போராட்டத்திற்கு பின் இந்த சிலையை திறந்து வைத்தது பெரிய மனநிறைவை தருகிறது என்று ஸ்டாலின் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com