விழுப்புரத்தில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட முதியவர் பலி

விழுப்புரம் அரசு மருத்துவமனையின் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட முதியவர் ஒருவர் வியாழக்கிழமை காலை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
விழுப்புரத்தில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட முதியவர் பலி
Updated on
1 min read

விழுப்புரம் அரசு மருத்துவமனையின் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் வியாழக்கிழமை காலை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விழும்புரம் பாணாம்பட்டு பகுதியை சேர்ந்த 60 வயதான முதியவர் காய்ச்சலால் மற்றும் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். 

உயிரிழந்த முதியவரின் ரத்த மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இருந்ததால் கரோனா நோய்க்கான வழிகாட்டுதல் படி, முதியவர் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com