காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

தெற்கு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Published on
Updated on
1 min read


ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 

தெற்கு காஷ்மீரின் சோபியன் மாவட்டம் மெலஹூரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். தாக்குதலின் முடிவில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றதாகவும், ராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com