மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்களப் பணியாளர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் இன்றைய (செவ்வாய்க் கிழமை) நிலவரப்படி 231 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த காவல்துறையை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 7,950-ஆக உள்ளது. மேலும் 1,877-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 3 காவலர்கள் உயிரிழந்ததால், கரோனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 107-ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் அதிக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. அங்கு 1,47,324 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 15,842 பேர் உயிரிழந்த நிலையில், 4,50,196 பேர் குணமடைந்துள்ளனர்.