92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 231 காவலர்களுக்கு கரோனா: 3 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்தனர்.

News image

மகாராஷ்டிரத்தில் புதிதாக 231 காவலர்களுக்கு கரோனா: மூவர் பலி

Updated On :4 ஆகஸ்ட் 2020, 8:05 am

DIN

மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்களப் பணியாளர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் இன்றைய (செவ்வாய்க் கிழமை) நிலவரப்படி 231 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த காவல்துறையை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 7,950-ஆக உள்ளது. மேலும் 1,877-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 3 காவலர்கள் உயிரிழந்ததால், கரோனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 107-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் அதிக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. அங்கு 1,47,324 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 15,842 பேர் உயிரிழந்த நிலையில், 4,50,196 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.