தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களாக கும்பக்கரை அருவியில் குறைந்தளவு நீர் வரத்து இருந்தது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் கம்ரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.