கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சாலை விபத்தில் சாலை பணியாளர் சாவு

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் வியாழக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் சாலை பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:12 pm

DIN


வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் வியாழக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் சாலை பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.

வெள்ளக்கோவில் கரூா் சாலை கிழக்கு காந்தி நகரைச் சேர்ந்தவர் பீட்டர் (55). நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர். இவர் தனது இருசக்கர வாகனத்தில் கோவை - கரூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே அவ்வழியே வந்த சரக்கு வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

அவரது சடலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. 

வெள்ளக்கோவில் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.