சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கேரளத்தில் 1,850 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் ஆணையம்

கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் 1,850 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image
தேர்தல் ஆணையம்
Updated On :4 டிசம்பர் 2020, 11:45 am

PTI

கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் 1,850 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் முழுவதும் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. முதற்கட்டமாக டிசம்பர் 8 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக டிசம்பர் 10 ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக டிசம்பர் 14 ஆம் தேதியும் வாக்குப் பதிவுகள் நடக்கவுள்ளது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 16ஆம் தேதி நடத்தபடவுள்ளது.

இதனையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து பதட்டமான வாக்குச்சாவடிகளாக 1,850 வாக்குச் சாவடிகளை வகைப்படுத்தியுள்ளனர்.

அதில், அதிகபட்சமாக கண்ணூர் மாவட்டத்தில் 785 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக பதானம்திட்டா மாவட்டத்தில் 5 வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் நூற்றுக்கும் அதிகமான பதட்டமான வாக்குச்சாவடிகளைக் கொண்ட மாவட்டங்களாக திருவனந்தபுரம் (180), மலப்புரம் (100), கோழிக்கோடு (120), பாலக்காடு (182) மற்றும் காசராகோடு (100), வயநாடு (152) உள்ளன.

இதனைத் தொடர்ந்து பதட்டமானாதாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின் போது விடியோ பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.