பிகார் மாநில முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பிகார் மாநில பாஜகவைச் சார்ந்தவர் சுஷில் குமார் மோடி(வயது 68). இவர் 2005ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மூன்று முறை பிகார் மாநில துணை முதல்வராக பதவி வகித்தார்.
இந்நிலையில், மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு பதிலாக திங்கள்கிழமை போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார் சுஷில்குமார் மோடி.