விவசாயிகள் போராட்டத்தால் ரூ. 2,400 கோடி இழப்பு: வடக்கு ரயில்வே

விவசாயிகளின் போராட்டத்தால் ரூ. 2,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே பொது மேலாளர் அசுதோஷ் கங்கல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

விவசாயிகளின் போராட்டத்தால் ரூ. 2,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே பொது மேலாளர் அசுதோஷ் கங்கல் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 20 நாள்களாக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கு முன் கடந்த 2 மாதங்களாக பஞ்சாபில் தொடர்ச்சியாக ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். இதனால் வடமாநிலங்களில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து வடக்கு ரயில்வே பொது மேலாளர் அசுதோஷ் கங்கல் கூறியதாவது,

விவசாயிகளின் போராட்டத்தால் பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளில் சுமார் ரூ. 2,000 முதல் 2,400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com