சிவகங்கை மாவட்டத்தில் அரசுத்துறை சங்கங்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. 
திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.
திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.
Updated on
1 min read

மானாமதுரை: சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. 

அரசுத்துறையின் அனைத்து ஊழியர்களையும் பாதிக்கும் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தி அரசு ஊழியர்களிடம் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. 

மானாமதுரை, திருப்புவம், இளையான்குடி உள்பட மாவட்டம் முழுவதும் பணியாற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களிடம் அந்தந்த துறை சங்கங்களின் நிர்வாகிகள் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

கையெழுத்து பெறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய படிவங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கோரிக்கைள்வலியுறுத்தப்படும் என சங்கத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com