புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அறந்தாங்கி அருகே கல்லணை கால்வாயில் உடைப்பு:  உடைப்பை சரி செய்யும் முயற்சியில் விவசாயிகள் 

அறந்தாங்கி அருகே கல்லணை கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு அடைப்பை சரி செய்ய விவசாயிகள் முயற்சி கொண்டுள்ளனர்.

News image
Updated On :21 ஜூன் 2020, 5:21 am

DIN

அறந்தாங்கி அருகே கல்லணை கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு அடைப்பை சரி செய்ய விவசாயிகள் முயற்சி கொண்டுள்ளனர்.

மேட்டுரில் இருந்து கடந்த 12-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி நீரை திறந்துவிட்டார். கல்லணையில் இருந்து 16 -ஆம் தேதி திறந்து விடப்பட்ட காவிரி நீர் சனிக்கிழமை அறந்தாங்கி கடைமடை பகுதியான மேற்பனைக் காட்டிற்கு வந்தது. 

Story image

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் வேம்பங்குடி அருகே பெரிய உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள வயல் வெளியில் காவிரி நீர் வீணாக வெளியேறி வருகிறது. அடைப்பை சரி செய்ய ஜே.சி.பி. உதவியுடன் சவுக்கு கம்புகளை குறுக்கே கட்டி மணல் வைத்து அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Story image

கரைகளை பலப்படுத்தாததே உடைப்புக்கு காரணம் என்றும் இது குறித்து அதிகாரிகள் அலட்சியமாக இருந்தாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் இதே போன்ற சம்பவம் காரணமாக 3000 கன அடி நீர் குறைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.