விழுப்புரம் அருகே மணல் குவாரி முற்றுகை: 40 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பொதுமக்களின் எதிர்ப்பை மீறி செயல்படும் அண்டராயநல்லூர் மணல்குவாரி முற்றுகையில் அனைத்துக் கட்சியினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணல்குவாரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினர்.
மணல்குவாரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினர்.


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பொதுமக்களின் எதிர்ப்பை மீறி செயல்படும் அண்டராயநல்லூர் மணல்குவாரி முற்றுகையில் அனைத்துக் கட்சியினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

 திருவெண்ணைநல்லூர் அருகே அரசு சார்பில் அன்றாயநல்லூரில் அண்மையில் தொடங்கப்பட்ட மணல் குவாரியை மூட வலியுறுத்தி பாமக. பாஜக, திமுக, அமமுக, இ.கம்யூ., மா.கம்யூ, விசிக உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் புதன்கிழமை குவாரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடையை மீறி  போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை, திருவெண்ணநல்லூர் காவலர்கள் கைது செய்தனர். ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டு கைதானவர்களை தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com