

திருப்பரங்குன்றம்: மாலத்தீவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இரண்டாவது முறையாக 171 பயணிகள் மதுரை வந்தடைந்தனர்.
பயணிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் மதுரை விமான நிலையத்தில் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பயணிகள் அனைவரும் மதுரையில் உள்ள தனியார் விடுதி மற்றும் அரசு கரோனா சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
இவர்கள் தொடர்ந்து ஏழு நாட்கள் கண்காணிக்கப்பட்டு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்பு அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.