பனாஜி: கோவாவில் மேலும் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இதையடுத்து மாநிலத்தின் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தொற்று கண்டறியப்பட்டுள்ள அனைவரும் சனிக்கிழமை மும்பையில் இருந்து வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பயணிகள் என்று அமைச்சர் கூறினார்.