கொல்கத்தாவின் என்டலி பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒரு பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கான்வென்ட் சாலையில் உள்ள பழைய இரண்டு மாடிக் கட்டடம் செவ்வாய்க்கிழமை காலை இடிந்து விழுந்தது.
இதில், இடிபாடுகளில் சிக்கிய அடையாளம் தெரியாத ஒருவர் பலியாகினார். மேலும், இடிபாடுகளில் சிக்கியாவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.