கொல்கத்தாவில் 21 சிறுவர்கள் மீட்பு : 3 பேர் கைது
மத்திய கொல்கத்தாவில் பிகாரைச் சேர்ந்த 21 சிறுவர்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டனர்.


மத்திய கொல்கத்தாவில் பிகாரைச் சேர்ந்த 21 சிறுவர்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஸ்ட்ராண்ட் சாலையில் உள்ள பாபுகாட் பகுதியில் காவல்துறையினர் ஒரு பேருந்தை திங்கள்கிழமை காலை 5.30 மணியளவில் நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்தப் பேருந்தில் பிகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்ட 21 சிறுவர்கள் இருந்தனர். அவர்களை மீட்ட காவல்துறையினர், கடத்தலில் ஈடுப்பட்ட 3 பேரைக் கைது செய்தனர்.
அந்தச் சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளராகப் பயன்படுத்த கடத்தப்பட்டுறுக்கலாம் என சந்தேகிக்கின்றோம். மேலும், கைது செய்யப்பட்ட 3 பேரை விசாரித்து வருகிறோம் என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...