அருப்புக்கோட்டையில் செப்.11 - 20 வரை புத்தகக் கண்காட்சி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கத்தினர் சார்பில் சிறப்பு புத்தகக் கண்காட்சி வரும் செப்.11 முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கத்தினர் சார்பில் சிறப்பு புத்தகக் கண்காட்சி வரும் செப்.11 முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கத்தினரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தினரும், அருப்புக்கோட்டை ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் அமைப்பினர் ஆகியோர் இணைந்து நடத்தும் சிறப்புப் புத்தகக் கண்காட்சியானது அருப்புக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கத்தின் பொருளாளர் மு.கார்த்திக் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஜி.மணிமாறன் ஆகியோர் கூறியதாவது, அருப்புக்கோட்டை ஏ.என்.யூ.டி. காமராஜர் திருமண மண்டபத்தில் நகர் காவல்துணைக் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் தலைமையில் தொடங்கி வைக்கப்பட உள்ள இப்புத்தகக் கண்காட்சியானது வரும் செப்டம்பர் 11 முதல் 20ம் தேதிவரை நடைபெற உள்ளதெனவும், காலை 10.30 முதல் இரவு 8.30 மணிவரை புத்தக விற்பனை நடைபெற உள்ளதெனவும், அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், அப்போது வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டுமெனவும், அத்துடன் கைகளில் கிருமி நாசிணி இட்டு, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் அவர்கள் அறிவுறுத்தியதுடன், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், முக்கியப் பிரமுகர்கள், கல்வியாளர்கள், பள்ளி, கல்லூரி கல்வி நிறுவனத்தினர் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் சிறப்பான ஆதரவை வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com