லே விமான நிலையத்தில் புதிய முனையம் : ஏஏஐ அறிவிப்பு

லே விமான நிலையத்தில் ஆண்டிற்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் விதமாக புதிய முனையம் கட்டப்படும் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
லே விமான நிலையம்
லே விமான நிலையம்
Published on
Updated on
1 min read

லே விமான நிலையத்தில் ஆண்டிற்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் விதமாக புதிய முனையம் கட்டப்படும் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

தற்போதுள்ள விமான நிலையத்தின் முனையம் மூலம் ஆண்டிற்கு 9 லட்சம் பயணிகளைக் கையாள முடிகின்றது.

போக்குவரத்து வளர்ச்சி மற்றும் தேவையை பூர்த்தி செய்ய, நவீன வசதிகளுடன் கூடிய அதிநவீன புதிய முனைய கட்டடத்தை ரூ. 480 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றது.

புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகள் டிசம்பர் 2022 க்குள் முடிவடையும், மேலும் இந்த முனையம் மூலம் ஆண்டுதோறும் 20 லட்சம் பயணிகளைக் கையாள முடியும்.

கட்டடம் நவீன நெறிமுறைகளுடனும், பண்டைய புத்த கால வடிவமைப்பை பிரதிபலிக்கும் விதமாகவும் கட்டப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டிருந்தது.

லேவில் உள்ள குஷோக் பாகுலா ரின்போசே விமான நிலையம் சராசரி கடல் மட்டத்திலிருந்து 3,256 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com