தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உலக அளவில் கரோனா பலி 82 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை  82 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 31 ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :8 ஏப்ரல் 2020, 3:04 am

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை  82 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 31 ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவின் வூஹானில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா, இன்று ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வருகிறது. நோய்த்தொற்றால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பாலியானவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றுக்கு ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 14 லட்சத்து 31 ஆயிரத்து 689-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நோய்த்தொற்றுக்கு அதிகயளவில் இத்தாலியில் 17,127 பேரும், ஸ்பெயினில் 14,045 பேரும், அமெரிக்காவில் 12,854 பேரும், பிரான்ஸ் 10,328, இங்கிலாந்தில் 6,159, ஈரானில் 3,872 பேரும்,     சீனாவில் 3,333 பேரும், ஜெர்மனியில்  2,016 பேரும், பெல்ஜியத்தில் 2,035 பேரும், நெதர்லாந்தில் 2,101 பேரும், சுவிஸ்சர்லாந்தில் 821 பேரும், துருக்கியில் 725 பேரும் அதிகயளவில் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் நோய்த்தொற்று சிகிச்சை பெற்றவருபவர்களில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 142 பேர் குணமடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் பலியானவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 12 ஆயிரத்தைக் கடந்தது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதால் நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அங்கு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,00,412-ஐத் தாண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.