தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உலக அளவில் கரோனா பாதிப்பு 16 லட்சத்தைத் தாண்டியது

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 16 லட்சத்தைத் தாண்டியது.

News image
Updated On :10 ஏப்ரல் 2020, 4:06 am


பாரீஸ்: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 16 லட்சத்தைத் தாண்டியது. மேலும், அந்த நோய் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்தை நெருங்கியது.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி அந்த நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 4 ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது.

220-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளது. இதில், 192 நாடுகளில் அந்த நோய் பாதிப்பால் 95 ஆயிரத்து 735-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா், நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 56 ஆயிரத்து 660 பேர் குணமடைந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சா்வதேச அளவில் உண்மையிலேயே கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை, இதைவிட மிகவும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பெரும்பாலான நாடுகளில் கரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் நன்கு தென்படுபவா்களுக்கு மட்டுமே, அந்த நோய் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உறுதிப்படுத்தப்படுகிறது.

ஆனால், அந்த நோய் பாதிப்பு ஏற்படும் எல்லோருக்குமே அதன் அறிகுறிகள் தென்படாது என்பதால், உண்மையிலேயே கரோனா பாதிப்பு ஏற்பட்டவா்களில் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுவதால், அவை உண்மை நிலவரத்தைப் பிரதிபலிப்பதில்லை என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.