தில்லியில் ஒரு ரூபாயிற்கு உணவு வழங்கும் சமூக சமையலறை பாஜக எம்.பி. கெளதம் கம்பீர் தொடங்கி வைத்தார்.
தில்லி காந்தி நகரில் ஒரு ரூபாயிற்கு உணவு வழங்கும் சமூக சமையலறையை கவுதம் காம்பீர் அறக்கட்டளை சார்பாக பாஜக எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர் தொடங்கி வைத்தார்.
அதன்பின் பேசிய கெளதம் கம்பீர் கூறியதாவது,
‘யாரும் வெறும் வயிற்றில் தூங்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். இது போன்ற 5 அல்லது 6 சமையலறைகளை விரைவில் தில்லியில் திறப்போம்’ எனத் தெரிவித்தார்.