எந்த மொழியையும் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்

எந்த மொழியையும் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு,
எந்த மொழியையும் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்

புதுச்சேரி: எந்த மொழியையும் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தாய்மொழி கல்வி அவசியம் என்றும் கூடுதல் மொழிகளை கற்றறிவதில் தவறில்லை என கூறினார். 

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 28வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு பங்கேற்று 225 பிஎச்டி, 40 எம்பில், 202 தங்க பதக்கங்கள், 3614 பட்ட மேற்படிப்பு 11046 பட்டப்படிப்பு, 148  பிஜி டிப்ளமோ மற்றும் 2820 தொலைக்கல்வி பயின்றோருக்கு பட்டமளித்து பேசியதாவது:

அனைத்து கட்டமைப்பும் பல்கலைக்கழகங்களில்  உள்ளது. கல்வி, ஆராய்ச்சியில் முழு கவனத்தை மாணவர்கள் செலுத்த வேண்டும் பல்கலைக்கழகத்தில் சமூக பொறுப்புணர்வு திட்டம் முக்கியமானது. வாய்ப்புகளை ஏற்று முன்னேறுங்கள். நேரத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். கல்வியே முதல் நோக்கம். அரசு அறிவிக்கும் திட்டசெயல்பாடுகளில்  இணைத்து கொள்ளுங்கள்.

பல்கலைக்கழக சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் இணைத்து கொள்ளுங்கள், மரம் நடுதல், நீர்நிலை தூய்மை ஆகியவற்றில் சமூக பணிகளில் ஈடுபடுத்தி கொள்ளுதல் சிறந்த குடிமகனாகலாம். மேலும் சிறந்த பசுமை பகுதியாகவும், நீர் சேகரிப்பாகவும் மாற்றலாம், தற்போதையது போதுமானதல்ல. சோலார் மூலம் மின் உற்பத்தி செய்து வருவாயும் ஈட்டலாம்.

திட்ட செயல்பாட்டில் முதல் பல்கலைக்கழகமாக இருப்பதை விட சிறந்த பல்கலைக்கழமாக இருப்பதே தேவை. பல்கலைக்கழகங்கள் சமூகத்திலிருந்து தொடர்பில்லாமல் தனிமைப்பட்டு இருக்கும் அலங்கார டவராக இருக்கக்கூடாது. அறிவை உருவாக்கி, இணைத்து அடுத்த தலைமுறைக்கு பகிர்வது அவசியம். பல்கலைக்கழகங்கள் அறிவு களஞ்சியங்களாக புவியியல் அமைப்பை தாண்டி இருக்கவேண்டும். பல்கலைக்கழகங்கள் மக்களின் சமூக வாழ்வுடன் இணைந்திருக்க வேண்டும்.

கல்வியானது சமூகத்தில் வேர் போல் இருந்து பூக்களின் நறுமணத்தை போன்று அறிவை உலகெங்கும் பரவ வேண்டும். அது மக்களுக்கு சக்தியையும் தர வேண்டும். நேரத்தில் பாதியை வகுப்பறையிலும், மீதி நேரத்திலும் சமூகத்திலும் இருக்க வேண்டும். கிராம மக்கள் பிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். விவசாயத்தை அறியுங்கள். நம்மூர் முக்கிய பணி அது. உள்ளூர் மக்களின் தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும். பணிவாய்ப்புகளை உருவாக்கும் கல்வி அவசியம்.  

பல்கலைக்கழகங்கள் கல்வி, ஆராய்ச்சி மூலம் கல்வி புரட்சியை முன் நிறுத்த வேண்டும். உலகெங்கும் உள்ள புதிய வாய்ப்புகள் மற்றும் புது முயற்சிகளுக்கான கதவையும், ஜன்னலையும் பல்கலைக்கழகங்கள் திறக்க வேண்டும். உள்ளூர் தேவை அறிதலும் அவசியம்.

பட்டம் பெறுதல் ஒரு படிக்கட்டுதான். தற்போதைய உலகத்தில் மாற்றம் படு வேகமாக நிகழ்கிறது.  பணிபுரிதல், வெற்றியின் அளவீடு, இணைந்து பணியாற்றுதல் உள்ளிட்டவை புதிய வழியில் செல்கிறது. தற்போதைய சூழலில் மாற்றத்துக்கு ஏற்ப சரி செய்து கொள்வது அவசியம். புதிய வாய்ப்புகளையும் அதில் இணைத்து கொள்ள வேண்டும். உங்கள் இலக்கை அடையும் வகையில் உங்கள் பணியை அமைத்து கொள்வது அவசியம்.

கற்றல் தொடர் பணி. தொடர்ந்து கற்று உலகநாடுகளுக்கு சென்று பணிபுரியுங்கள், பொருள் ஈட்டுகள், ஆனால் மீண்டும் திரும்பி வந்து தாய் நாட்டுக்கு சேவை செய்யுங்கள்,கல்வியானது புனிதமானது. பணிக்கானது மட்டுமல்ல அறிவை உருவாக்குவதே முதன்மையானது.

ஆசிரியர்கள் விரிவாக எடுத்துகூறி எல்லைகளை நிர்ணயித்து செய்து முடிப்பவரல்ல. குழந்தைகளுக்கு கல்வியில் உதவி செய்து வழிகாட்டுவதே முக்கியப்பணி. இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும், ஆற்றுப்படுத்துவராகவும், நண்பராகவும் முன்மாதிரியாகவும் இருப்பது அவசியம். குறிப்பாக உணர்வுகளை கையாளுதல் மிக முக்கியம். அதுவே நல்ல மனிதராக இருப்பதற்கு அவசியம். பணமீட்டும் அறிவையும் கற்றல் அவசியம். நன்னெறி கல்வியின் தேவையும் அதிகரித்துள்ளது.

யுனெஸ்கோ 4 வழிகளை அறிவுறுத்தியுள்ளது. கற்றலை அறிதல், கற்றலை செயல்படுத்துதல், கற்றலை கொண்டு வாழ்தல் ஆகியவற்றுடன் கற்றலை கொண்டு சமுகத்திலுள்ள அனைத்து மக்களுடன் இணைந்து வாழ்தல் மிக முக்கியமானது. இதற்கு பேராசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. இதன் மூலம் வாழ்வின் தரம் உயரும்.

தாய்மொழி கல்வி அவசியம், கூடுதல் மொழிகளை கற்றறிவதில் தவறில்லை. ஹிந்தி, ஆங்கிலம் கற்று கொள்ளுங்கள். நாராயணசாமி புகழுக்கு மக்கள் மொழி அறிந்தது தான். ஹிந்தியும் அவருக்கு தெரியும்.  எவ்வளவு மொழி கற்றாலும் முதலில் தாய்மொழிதான்.

தண்ணீர் பற்றாக்குறை உலகளாவிய பிரச்சினையாகவுள்ளது. அதை பாதுகாக்கவும், மறு சுழற்சியில் பயன்படுத்துவது அவசியம், இளையோரிடம் நேர்மறை மனப்பான்மையே தற்போது தேவை. எதிர்மறை எண்ணமல்ல.
நிர்பயா விஷயத்தில் சட்டம் இயற்றுவது போதாது. அரசியல் வலிமையும் தேவை. அதுவும் போதாது. இறுதியில் அதை நடைமுறைப்படுத்துவதும் அவசியம்.

பல்கலைக்கழக மானியக்குழுவானது உயர் கல்வி நிறுவனங்களில் மனித மதிப்பு  மற்றும் தொழில் தர்மம் உயர்நிலையில் இருக்க ஐந்து முறைகளை வடிவமைத்துள்ளது.

அதன்படி கல்வி கற்றல்   முழு வளர்ச்சி மேம்பாடாக இருக்க வேண்டும், தவறு செய்யாத ஆளுகை திறன், சிறந்த பல்கலைக்கழக நிர்வாக திறன், நல்லது செய்தால் பாராட்டும்திட்டம், பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வி நிறுவன சூழல் சரியானதை செய்தால் மகிழ்ச்சி தருவதாகவும், தவறானதை செய்வோர் ஊக்கம் அடையாமல் இருக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு உடையை இந்திய கலாச்சாரத்துக்கு ஏற்ற வகையில் மாற்றுங்கள். ஆங்கில முறையேயே இன்னும் கடைபிடிப்பது ஏன்- கதர், காதி, பட்டு என இந்திய தொடர்பானதாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், எம்பி கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீந்த் சிங் வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com