அரக்கோணம் - சென்னை ரயில் மார்க்கத்தில் மோசூர் ரயில்நிலையம் அருகே சிக்னல் கோளாறு இன்று வியாழக்கிழமை காலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சம்பவங்களால் அரக்கோணம் வழித்தடத்தில் அனைத்து ரயில்களும் ஓரு மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அரக்கோணம் - காட்பாடி ரயில்மார்க்கத்தில் அன்வர்திகான் பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாள விரிசல் மற்றும் அரக்கோணம் - சென்னை ரயில்மார்க்கத்தில் மோசூர் ரயில்நிலையம் அருகே சிக்னல் கோளாறு இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சம்பவங்களால் அரக்கோணம் வழித்தடத்தில் அனைத்து ரயில்கள் சேவையிலும் ஓரு மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.