திண்டுக்கல் ஒன்றியத்தில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தம்.
இது தொடர்பாக திண்டுக்கல் ஒன்றிய திமுக செயலர் நெடுஞ்செழியன் செய்தியாளர்களிடம் கூறியது: தபால் வாக்குகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவில்லை. இதனால் தபால் வாக்குகள் நீலநிற உறை கொள்ளும் பேருக்குமேல் காக்கி உரைக்குள் படிவம் 16 மற்றும் 17 இணைப்பதற்கு பதிலாக இந்த படிவங்களை நீல நிற உரைக்குள் வைத்துள்ளனர்.
இதனால் தபால் வாக்குகள் செல்லாது என கூறுகின்றனர்.
தேர்தல் அதிகாரிகளின் தவறான முடிவால் அரசு ஊழியர்களின் வாக்குகள் வீணாகும் என குற்றம்சாட்டியுள்ளனர்.