அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு

அரசியல் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

News image
Updated On :18 மார்ச் 2020, 3:44 am

புதுதில்லி: அரசியல் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் வாராந்திர கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கரோனா வைரஸ் தொற்றுநோய் ஒழிக்கப்படும் வரை பாஜகவினர் எந்த அரசியல் நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கரோனா விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். இதேபோன்று பாஜக எதிர்க்கட்சியாக இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் எந்தவொரு போராட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதை எம்.பி.க்கள்  தவிர்த்துவிட்டு, தங்கள் பகுதியில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

இதுபோன்ற நேரங்களில் எந்தவித கருத்துவேறுபாடுகளையும் வெளிப்படுத்தாமல் நாம் முழு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். இதனை அனைவரும் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 137 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.