வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தும் பணி துவக்கம்

வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தும் பணி துவக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தும் பணியில் வருவாய் துறையினரும் மற்றும் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர். 


திருவள்ளூர் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தும் பணியில் வருவாய் துறையினரும் மற்றும் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த 15 பேர் கடந்த பிப்ரவரி 20 முதல் பல்வேறு நாடுகளில் இருந்து அவரவர் பகுதிகளுக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், வருவாய் துறையினரும் சுகாதார துறையினரும் மேற்கண்ட 15 நபர்களின் வீடுகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி அவர்களது குடும்பத்தாரை தனிமைப்படுத்தி உள்ளனர்.

மேலும் அனைவரது கைகளிலும் தனிமைபடுத்தப்பட்டவர் என்கிற முத்திரையும் குத்தப்பட்டுள்ளது

அனைவரையும் வருவாய் துறையினரும் தொடர்ந்து கண்காணிப்பதோடு யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என எச்சரித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com