விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை ஒரே நாளில் மேலும் 70 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கரோனா பாதித்த 70 பேரும் மராட்டியத்தில் இருந்து, சிறப்பு ரயில்கள் மூலம் விழுப்புரம் வந்தவர்கள்.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 400-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை வட்டார தகவல் தெரிவிக்கிறது.
இதுதொடர்பான அறிவிப்பு, வழக்கம் போல் வியாழக்கிழமை மாலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.